கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிபர், அனைத்து அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற ஊறுப்பினர்களும் ஒரு மாதச் சம்பளம் பெறமாட்டார்கள்!
கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற ஊறுப்பினர்களும் ஒரு மாதச் சம்பளம் பெறமாட்டார்கள் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார். அவர்களுடன் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் ஒரு மாதச் சம்பளம் பெறாமல் இருக்க முடிவு செய்துள்ளார்.
அதோடு, மூத்த பொதுத்துறை அதிகாரிகளுக்கும் 2-வாரச் சம்பளம் குறைக்கப்படும். பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள உறுதியான நம்பிக்கையால், கொரோனா வைரஸ் எதிர்த்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது என்று திரு. ஹெங் கூறினார். இந்தப் பிணைப்பே, தற்போதைய சவால்மிக்க காலக்கட்டத்தைத் தாண்டிச் செல்ல வழி வகுக்குமெனத் துணைப்பிரதமர் ஹெங் நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா தொற்று ஒரு சமூகமாக எதிர்த்துப் போராடும் சிங்கப்பூரர்களுடன், அரசியல் தலைவர்களும் தங்கள் பங்கைச் செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.