சிங்கப்பூரில் ஹரஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் லீ சியென் லூங்…!!!
சிங்கப்பூரில் ஹரஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிகளுக்கும் பிரதமர் லீ சியென் லூங் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கியக் கூறுகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு இந்த யாத்திரை அர்த்தமுள்ள ஒன்றாக அமைய வேண்டும் என்று தம் பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் இருந்து தொடங்கிய அவர்களின் பயணம் சுகமானதாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
!Advert!
இன்று பள்ளிவாசல்களில் இடம்பெறும் சிறப்புத் தொழுகைகளைப் பற்றியும் குர்பான்” சடங்கைப் பற்றியும், தம் பேஸ்புக் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குர்பான் சடங்கில் பலி கொடுக்கப்படும் ஆடுகளின் இறைச்சி, வசதி குறைந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளப்படும் மரபையும் திரு லீ நினைவு படுத்தியுள்ளார். வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்தச் சடங்கு நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.