பல் வலி உட்பட பற்களில் வரும் அத்தனை நோய்களுக்கும் ஒரே மருந்தாகும் சின்ன வெங்காயம்.! படித்து பகிருங்களேன்..!!
இழந்த சக்தியைப் பெற வெங்காயமானது உதவுகின்றது. இது சீரான இரத்த ஓட்டத்தைத் தரவல்லது. பத்து சிறிய வெங்காயத்தை உரித்து ஒரு டம்ளரில் நீர் ஊற்றி வைத்துவிடவேண்டும். மறுநாள் காலையில் பல்துலக்கியதும் வெங்காயத்தை மென்று தின்று இந்த நீரைக் குடித்துவிடவேண்டும். இரத்த அழுத்த நோய், இரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு நோய்கள் இதனால் தீரும்.
நம் உடலுக்கு அவசியமாக நோயெதிர்ப்பு சக்தியானது அவசியமாகின்றது ஏனெனில் பாக்டீரியா, வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து காப்பதற்கு இந்த நோயெதிர்ப்பு சக்தியானது அவசியமாகின்றது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க இந்த வெங்காயமானது பல்வேறு வகைகளில் நமக்க உதவுகின்றது.வெங்காயங்களில் உள்ள வைட்டமின் சி என்பது பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
வெங்காயத்தை குரல் வளத்தை இனிமையாக வைத்திருக்கவும் பயன்படுத்தலாம். குரல் இனிமையாக, தொண்டையில் சளி சேராமல் இருக்க வெங்காயச் சாறு மிகவும் உதவியாக இருக்கும். வெங்காயத்தோடு ஓரிரு மிளகு சேர்த்து உண்டு வர குரல் வளமானது சீராகி இனமையாகும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயப் பூவை பூண்டு , கடுகு , வெந்தயம் சேர்த்து பிரட்டலாக செய்து உண்ண குடலில் சேர்ந்துள்ள வாயுத்தொல்லை நீங்கும். மலக்கட்டு நீங்கும்.வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்தும் கிடைக்கும். வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். வெங்காயத்தின் தண்டு ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை, கிருமிகளுக்கு எதிரானது. வீக்கம், வலி போக உதவும்.வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும்.
நம்மில் பலர் தூக்கமில்லாம் அவதிப்படுகின்றோம். அதற்கு வெங்காயத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம். இரவில் வெங்காயச் சாற்றுடன் தண்ணீர், தேன் கலந்து 7 நாட்கள் குடித்தால் போதும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர் பின்னர் குறித்த நேரத்தில் தூங்கிவிடுவார்.
வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.