புகை பிடித்த குற்றத்திற்காக டாக்சி ஓட்டுநருக்கு அபராதம்..!!!
சிங்கப்பூரில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதிகாரிகளிடம் மண்டியிட்டுக் கெஞ்சிக்கொண்டிருந்த டாக்சி ஓட்டுநர் புகை பிடித்த குற்றத்திற்காக 200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
டாக்சி ஓட்டுநர் அதிகாரிகளிடம் கெஞ்சும் படம் அண்மையில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது குறித்து தெரியும் என்று சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
நேற்று மதியம் 12.30 மணிக்கு மவுண்ட் எலிஸபெத் ரோட்டில் (Mount Elizabeth Road) ஓட்டுநர், டாக்சியில் அமர்ந்து புகைபிடித்துக்கொண்டிருந்தார். பொதுச் சேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனத்தில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம்.
அது போன்ற குற்றத்தைப் புரிவோருக்கு 200 வெள்ளியில் இருந்து 1,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.