மார்பகம் அகற்றப் பட்ட நிலையில் வைத்தியசாலையில் இருந்தபடி உதவி கோரும் நடிகை சிந்து..! சோகத்தில் ரசிகர்கள்..!!
பிரபல நடிகை சிந்து புற்றுநோய் பாதிப்பால் அவஸ்த்தை பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அங்காடி தெரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிந்து, அதன் பின் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்தார். திரைப்படங்கள் மட்டும் இன்றி சீரியலிலும் கவனம் செலுத்திய சிந்து ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென மார்பில் ஏற்பட்ட மார்பக புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் சத்திரசிகிச்சையினால் ஒரு பக்க மார்பகத்தை அகற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் சிந்துவை நடிகர் பாண்டி அவர்கள் சந்தித்துள்ளார்.
அதன் போது நடிகை சிந்து பாண்டியின் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றேன். எனது மருத்துவ செலவுக்கு நடிகர் கார்த்தி உட்பட பலர் உதவி செய்தனர். அவர்களின் உதவியால் தற்போது மார்பக சத்திர சிகிச்சை முடிந்து விட்டது.
ஆனால் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னுமொரு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர். நான் ஏராளமானவர்களுக்கு உதவி செய்துள்ளேன், ஆனால் எனக்கு உதவி செய்ய அவர்கள் முன் வரவில்லை. தயவு செய்து முடிந்தவர்கள் உதவுங்கள். நான் குணமான பின் உங்களுக்கு உதவுவேன் என தெரிவித்துள்ளார்..!!