“இன்று மரணமடைந்த சித்துவிற்கு திருமணம்” பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்து பற்றி உருக்கமாக பேசிய தோழி தியா.!!
இன்று சித்ரா இருந்து இருந்தால் திருமணம் நடந்திருக்கும் என அவரது தோழியான தொகுப்பாளினி தியா வெளியிட்ட பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியரில் நடித்து வந்த அதே நேரம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார்.
சம்பவ தினத்தன்று ஸ்டார் மியூஸிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜே சித்ரா ஹோட்டலுக்கு வந்து சில மணி நேரங்களில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பலரும் இதனை கொலை என்று கூற சித்துவின் கணவர் தற்கொலை என்றார்.
மருத்துவ பரிசோதனையிலும் தற்கொலை என வந்ததால் தற்கொலைக்கு தூண்டிய குற்றச் சாட்டின் பேரில் சித்துவின் கணவர் ஹேமந்தை சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து நடந்த விசாரணை அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது.
தற்கொலை தான் என விசாரணை அறிக்கை முடிக்கப் பட்டது. இந்த நிலையில் சித்துவின் தோழி மீண்டும் சித்துவை நினைவு கூர்ந்துள்ளார். சித்து தனது திருமணத்தை இன்றைய தினமே நடத்த திட்டமிட்டுள்ளார். உயிருடன் அவர் இருந்து இருந்தால் இன்று அவருக்கு திருமணம் முடிந்திருக்கும் என தொகுப்பாளினி தியா மேலும் தெரிவித்துள்ளார்.!!