துன்பம் தீர்க்க சிவ மந்திரம்.! நம்பிக்கை உள்ளவர்கள் படியுங்கள்.!!
உலகில் நன்மை தீமை, இறப்பு பிறப்பு, உறவு பிரிவு,இப்படி எல்லாம் இருப்பது போல் நாத்திகம் ஆத்திகம் என்றும் இருக்கின்றது, சிலர் கடவுளை நம்புகின்றனர், சிலர் நம்புவதில்லை, கடவுளை நம்பாதவர்கள் கூட தன்னை மீறிய சக்தி ஒன்று உலகில் இருக்கிறது என்று நம்புகின்றனர். இப்படி நம்புகின்றவர்களுக்காக இந்த தகவலை பகிர்கின்றோம்.
வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள், அல்லது நிம்மதி இன்மை இருந்தால் சிவ வழிபாடு சிறந்தது என கூறப்படுகின்றது. அதிக அளவில் செலவு செய்து செய்யப் படும் வழிபாடுகளை விட வீட்டில் சாதாரணமாக செய்யப் படும் வழிபாடுகளுக்கே அதிக நன்மை கிடைப்பதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக வில்வம் இலை கொண்டு பூஜை செய்வது சிறந்தது. இதில் சிறந்த ஒரு மந்திரம் உள்ள, சமஸ்கிருத மந்திரம்: ஓம் நம ஷிவாய தமிழ் மந்திரம்: சிவ சிவ என்னச் சிவகதி தானே! என தினமும் கூறினாலே போதுமாம். எந்த துன்பம் வந்தாலும் சமஸ்கிருத மந்திரம்: ஓம் நம ஷிவாய தமிழ் மந்திரம்: சிவ சிவ என்னச் சிவகதி தானே!
என அடிக்கடி கூறிக்கொள்வதால் மன நிம்மதி கிடைப்பதுடன் பிரச்சனைகளும் சிறிதாக தெரிகிறதாம். வீட்டில் பிள்ளையார் வழிபாடு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு சிவ நாமம் உச்சரிப்பது முக்கியம் என கூறப்படுகின்றது.