இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப் படும் விமான நிலையங்கள்..! இதோ முழு விபரம்..!!
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மூடப் பட்டிருந்த விமான நிலையக்கள் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப் பட உள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வர தடை விதிக்கப் பட்டதுடன் விமான நிலையங்கள் மூடப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளதால் விமான நிலையங்கள் சுற்றுலா பயணிகளுக்காக வரும் ஆகஸ்ட் 1ம் திகதியில் இருந்து திறக்கப் படும் என அரசு அறிவித்தது.
ஆனால் அரசு அறிவித்த தினத்திற்கு முன்பதாக தங்கள் விமான பயணங்களை மேற்கொள்ள விமான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கமைய வரும் ஜூலை 15ம் திகதி விமான நிலையங்கள் திறக்கப் பட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது..!!