இலங்கை குண்டுத் தாக்குதல் எப்படி நிகழ்ந்தது – பின்னணியில் யார் யார்? அனைத்தும் வீடியோ வடிவில்! இதோ!!
ஸ்ரீலங்காவில் ISIS தீவிரவாத அமைப்பினரால் உயிர்த்த ஞாயிறன்று நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில், இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளார்கள். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள். அப்பாவி பொது மக்கள் மீது இடம் பெற்ற கண் மூடித்தனமான இத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேக நபர்களைக் கைது செய்து வருவதுடன், வெடி குண்டு பொதிகளையும் கண்டு பிடித்து செயலிழக்கச் செய்து வருகிறார்கள்.
அத்துடன், மேலும் பல தாக்குதலாளிகள் நாட்டின் பல பாகங்களில் ஒளிந்திருக்கலாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பினைப் பொது மக்களுக்கு வழங்கிய இலங்கை பாதுகாப்பு தரப்பு அவசரகாலச் சட்டத்தினை அமுல் படுத்தியுள்ளது. இந் நிலையில் இலங்கையின் மகாராஜா ஊடக குழுமத்தின் MTC வலையமைப்பின் News first சக்தி தொலைக் காட்சி குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர்களின் விபரங்கள், எவ்வாறு இந்த செயற்பாடுகளை அரங்கேற்றினார்கள் என்பது பற்றிய விபரங்களை தமது செய்தி ஊடாக வெளியிட்டுள்ளார்க்ள். அவை அனைத்தும் இதோ உங்களுக்காக. Video 1:
ISIS அமைப்பு , அரபு மொழியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களாக, அபு ஒபைடா, அபு அல் முக்தார், அபு காலீல், அபு ஹம்ஷா, அபு அல்பரா, அபு முகம்மட்மற்றும் அபு அப்துல்லாஹ் ஆகியோரின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது. Video 2;
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”