மிக பிரமாண்டமான முறையில் நடந்த சினேகாவின் மகள் பெயர் சூட்டு விழா..! என்ன பெயர் தெரியுமா..? இதோ..!!
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளுக்குள் ஒன்று தான் சினேகா பிரசன்னா ஜோடி. 5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்த பிரசன்னா அதன் பின் பல படங்கள் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களுக்குள் ஒருவராக வர முடியவில்லை.
ஆனால் சினேகா நடித்த அத்தனை திரைப்படங்களுமே வெற்றி பெற்றது. அஜித் விஜய் கமலஹாசன் உட்பட அனைத்து ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சினேகா பலரின் புன்னகை அரசியாக வலம் வந்துகொண்டிருக்கின்றார்.
அண்மையில் சினேகாவின் நடிப்பில் வெளியான திரைப்படமும் கொண்டாடப் பட்டு வருகிறது. பிரசன்னா சினேகா ஜோடிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் ஜனவரியில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா இடம் பெற்றுள்ளது.
இதில் குழந்தைக்கு “ஆத்யந்தா” என பெயர் சூட்டியுள்ளனர் இந்த பெயரின் அர்த்தம் “ஆதியும் அந்தமும் அற்றவள்’ என்பதாம். இந்த பெயரை சினேகா தனது மூத்த மகனுக்கு வைக்க இருந்த நிலையில் குடும்பத்தினர் ஏற்காததால் மாற்றியுள்ளார். இந்த நிலையில் அனைவரின் சம்மதத்துடன் ” ஆத்யந்தா ” என்ற பெயரை பெண் குழ்ந்தைக்கு வைத்துள்ளனர்..!