4ம் மற்றும் 5ம் இடம் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள்.!! பிக் பாஸ் 4 பைனலில் சற்று முன் நடந்த ஷூட்டிங்கின் உறுதியான தகவல்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 106 நாட்கள் இன்றுடன் முடிகிறது. தற்போது இறுதி நிகழ்ச்சிக்கான 75 சதவீத ஷூட்டிங் முடிந்து விட்டது. வழமைக்கு மாறாக இம்முறை 5 பேர் பைனல் வந்திருந்தனர். பாலாஜி, ரம்யா, ரியோ, சோம், ஆரி ஆகியோர் 106 நட்களை கடந்து பைனலிஷ்டாகினார்கள். இதில் ஆரிக்கு ஆரம்பத்தில் இருந்தே மக்களின் ஆதரவு இருந்தது.
ஆரியை எதிர்ப்பதால் பாலாவிற்கு எதிரிகள் இருந்தாலும் அதே காரணத்தால் தான் பாலாஜிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். ரியோ காமெடி பீஸாகவும், சோம் மிக்ஸராகவும் இருந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பெண் போட்டியாளர்களில் ரம்யா பாண்டியன் ஆண்களுக்கு நிகராக விளையாடினார். பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து நடந்துகொண்டார். சோம் எதற்கும் இல்லாமல் இருந்தார்.
எப்படியோ இவர்கள் பைனல் வந்து விட்டனர். நேற்று முகேன் வெற்றி கிண்னத்துடன் வீட்டிற்குள் வந்தார். இதனை அனைத்து போட்டியாளர்களும் கையில் ஏந்திக் கொண்டனர். அதன் பின் முகெனின் திரைப்படமான வெற்றி திரைப்படம் பற்றி பேசப் பட்டது. அதனை தொடர்ந்து 5வது இடத்தை பெற்று சோம் சேகர் வெளியேறினார்.
வாக்குகளின் அடிப்படையில் ஆகக் குறைந்த வாக்குகள் சோம் சேகருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து 4வது இடத்தை பெற்று ரம்யா பாண்டியன் வெளியேறி உள்ளார். தற்போது ஆரி, பாலாஜி ரியோ மூவரும் உள்ளனர். இவர்களுக்கான சூட்டிங் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் என தெரியவந்துள்ளது.! ரம்யா மற்றும் சோம்க்கு வாழ்த்துக்கள்.!!