கழுத்தில் மாலையுடன் திருமண ஜோடியாக ரம்யா பண்டியன் மற்றும் சோம் சேகர்.! வைரலாகும் புகைப்படம் இதோ..!!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பைனல் வரை வந்த போட்டியாளர்களில் இருவர் ரம்ய பாண்டியன் மற்றும் சோம் சேகர். இவர்களுக்குள் காதல் இருப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் பின்பு அது அப்பிடியே மறந்து போனது. மீண்டும் பைனல் அன்று 105 நாட்கள் பத்திரப் படுத்தி வைத்திருந்த ரம்யா கொடுத்த சாக்லட் பேப்பரை மீண்டும் ரம்யாவிடம் கொடுத்து ரம்யா மீது ஈர்ப்பு உள்ளதை சோம் சேகர் வெளிப்படுத்தினார்.
அதன் பின் ரசிகர்கள் ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சேகர் இருவரையும் வைத்து செய்த கார்டூன், மற்றும் ட்ரோல்களை சோம் சேகர் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரியில் போட்டு காதலை உறுதிப் படுத்திக் கொண்டார்.
தற்போது ரம்யாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இது இப்படி இருக்க சோம் மற்றும் ரம்யாவின் ரசிகர்கள் எப்படியாவது அவர்களை ஜோடி சேர்க்க பார்த்து இருக்கின்றனர்.
அண்மையில் ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சோகரின் புகைப்படத்தை எடிட் செய்து திருமண புகைப்படம் போல் வைரலாக்கி வருகின்றனர். ரம்யா சோம் சேகருக்கு திருமணம் நடந்தது அவர்களுக்கு தெரியாது, ஆனால் ரசிகர்களுக்கு தெரியும், இதை தான் கொடுமை என்பது.!!