சோம் சேகர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வரும் வரை காத்திருந்த குடும்பத்தினர்.! சோம் வீட்டில் திடீரென நடந்து முடிந்த திருமணம்.!! இதோ புகைப்படம்.!!
பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்து பைனல் வந்தவர் சோம் சேகர். எந்த ஒரு சண்டைக்கும் போகாமல் தானும் தனது பாடும் என இருந்த சோம் டாஸ்குகளில் முழு கவனம் செலுத்தினார். அனைத்து டாஸ்குகளிலும் கவனம் செலுத்தியதால் இறுதி வரை ஓய்வு அறைக்கு செல்லவே இல்லை. அதே போல் டிக்கெட் 2 பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று பைனலுக்கு நேரடியாக தேர்வானார்.
ஆரம்பத்தில் வெளியேற்றப் படுவார் என நினைத்த சோம் சேகர் பினாலே சென்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். பிக் பாஸ் வீட்டிற்குள் ரம்யாவை காதலித்தாலும் இறுதிவரை சொல்லவே இல்லை சோம். இந்த நிலையில் கடந்த 17ம் திகதி பிக் பாஸ் பைனல் இடம்பெற்றது, இதில் 5ம் இடம்பெற்று சோம் சேகர் வெளியேறினார். வெளியே சென்ற சோம் அமைதியானார்.
பின் உடல் நிலை சரி இல்லை என வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் சோம் சேகர் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டே நாளில் சோம் சேகர் வீட்டில் திருமணம் நிகழ்வு ஒன்று வந்துள்ளது. சோம் சேகரின் தம்பிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிலையில் சோம் சேகர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
ப்றீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் தான் சோம் சேகரின் தம்பி, இவருக்கு மிக எளிமையாக குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் திருமணம் இடம்பெற்றுள்ளது. சோம் சேகர் காதல் தோல்வி என்பதால் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தார், இதனால் தம்பியின் திருமணம் முடிந்துள்ளது, அடுத்து ரம்யா சோம் டும்டும்டும் தான்.!!