நாளைய தினம் நெருப்பு வளைய சூரிய கிரகணம் முடிந்ததும் இதனை கட்டாயம் செய்யுங்கள்..! அதிகம் பகிருங்கள்…!!
நாளைய தினம் நெருப்பு வளைய சூர்ய கிரகணம் தோன்ற உள்ள நிலையில் கிரகணம் முடிந்தவுடன் செய்யவேண்டிய ஆன்மீக ரீதியான விடயங்கள் இவை.. அறிவியலும் சில விடயங்களை கூறியுள்ளது, குறிப்பாக சூர்ய கிரகண நேரத்தில் வெளியில் செல்வது, வெளியில் வைத்துள்ள நீர் அருந்துவது,
அதே போல் வெறும் கண்ணால் சூரியனை பார்ப்பது போன்ற விடயங்கள் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும் என்று அறிவியல் கூறும் அதே நேரம் ஆன்மீகம் வைரஸ் அதாவது சூர்ய கிரகணத்தினால் ஏற்படும் கிருமிகளை வெளியேற்றும் முறை பற்றி தெரிவித்துள்ளது.
அதன் படி கிரகண நேரத்தில் நீர் மற்றும் உணவில் வில்வம் இலை அல்லது அருகம் புல் போட்டு மூடி வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். கிரகணம் முடிந்ததும் வீட்டை நன்றாக கழுவ வேண்டும். கழுவும் நீரில் மஞ்சள் சிறிதளவு, மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
வீடு கழுவி சுத்தப் படுத்திய பின் அனைவரும் குளித்து விடுங்கள், பின் வீட்டிற்கு சாம்பிராணி புகைப் பிடிக்க வேண்டும். முடிந்த அளவு கிரகணத்தின் போது வீட்டில் வேப்பிலை வையுங்கள். இது கிருமிகள் நெருங்குவதை தடுக்கும். அத்துடன் இந்த சூரிய கிரகணத்தை நேரில் பார்க்காமல் இருக்க வேண்டும்.
கதிர் வீச்சு ஆபத்தை ஏற்படுத்துவது கண்களுக்கு மட்டும் என நாம் நினைக்க கூடாது. முடிந்த அளவு எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். சூரிய கிரகணம் முடிந்த பின் வீட்டில் அல்லது கோயிலில் நிச்சயம் பூஜை செய்து விடுங்கள். என்ன தான் நாகரீக மாற்றம் இருந்தாலும் சில விடயங்களை கடைபிடிப்பது நம்பிக்கையை தாண்டிய நன்மை என்பதை உணருங்கள் .பிடித்தால் பகிருங்கள்… !!