கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்பிபி அவர்கள் பற்றி 4 நாட்களின் பின் வெளியான தகவல்..! வைரலாகும் வீடியோ..!!
கொரோனா வைரஸால் பாதிப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் ஆபத்தான நிலைக்கு சென்றவர் பாடகர் எஸ்பிபி அவர்கள். சில ஊடகங்கள் எஸ்பிபி இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தது. ஆபத்தான நிலையில் இருந்து சிகிச்சைகள் மூலம் மீண்டுவந்த பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நிலை பற்றி அவரது மகனான சரண் அவர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
ஆனால் கடந்த 10 திகதியின் பின் எந்த செய்தியும் வெளியாக வில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் சரண் அவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பாலசுப்பிரமணியம் அவர்கள் குணமடைந்து வருவதாகவும் இதற்கு ரசிகர்களின் பிரார்த்தனைகளும் காரணம் என கூறியுள்ள சரண்.
பிசியோதெரபி சிகிச்சைக்காக தற்போது 10 தொடக்கம் 20 நிமிடங்கள் அவரால் எழுந்து அமர்ந்திருக்க முடிகிறது என தெரிவித்துள்ளார். கொரோனா முற்றிலும் குணமாகிவிட்ட போதும் நுரையீரலில் உள்ள பிரச்சனை இன்னும் குணமாகவில்லை. அதனால் இன்னும் சிகிச்சை முடியவில்லை என சரண் மேலும் தெரிவித்துள்ளார்..!!
Today’s update from#SPBCharan about #SPB Sir’s Health#SPbalasubramanyam pic.twitter.com/nuuCuVO9N1
— Diamond Babu (@idiamondbabu) September 14, 2020