“அப்பா விடயத்தில் சீமான் சொல்லியது முழுவதும் பொய்”கொரோனாவை விட மோசமான நபர் சீமான் தான்.! எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன் பரபரப்பு பேட்டி.!!
நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் சில நேரம் சில நம்ப முடியாத விடயங்களை கூறி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் சீமான் அவர்களுக்கு மான் கறி கொடுத்ததாகவும், தலைவருடன் வேட்டைக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.
ஆனால் கடல் கடந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் தலைவரை பார்க்க ஒருமுறை சீமான் வந்து சென்றதும், புகைப்படம் எடுத்ததும் உண்மை, ஆனால் சீமான் சொல்வது மற்றவை அனைத்தும் பொய். ஊரில் இருக்கும் சாதாரண ஒருவருடன் தலைவர் எப்படி இருப்பாரோ அப்படி தான் சீமானையும் கவனித்தது என அறிக்கை விட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ” எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இலங்கைக்கு இசை நிகழ்ச்சிக்காக செல்லும் போது சீமானிடம் இலங்கைக்கு இசை நிகழ்ச்சிக்காக போகப் போகிறேனடா தம்பி, போய் வரட்டா என கேட்டதாகவும், சீமான் கவனமாக போய் வாருங்கள்” என வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில் எஸ்பிபி அவர்களின் மகன் மீடியாக்களை சந்தித்துள்ளார்.
அதில் சீமானை என் தந்தை சந்தித்தது இல்லை, ஏன் எங்கள் வீட்டில் சீமானின் பெயர் கூட கூறியது இல்லை. சீமான் என்ற ஒருவர் இருப்பதையே மறந்துவிட்டோம். அப்படி இருக்கையில் இவர் சொல்லும் பொய் சகிக்க முடியவில்லை. சீமான் கொரோனாவை விட மோசமானவர் என குறிப்பிட்டுள்ளார்.!