அடையாளம் தெரியாத அளவிற்கு அழகாகி ஹீரோயின் போல் மாறிய சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தி..! வைரலாகும் புகைப்படம் இதோ…!!
விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதை வென்றவர் குட்டிப் பெண் ஸ்பூர்த்தி. கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே எழுத பேச தெரிந்த ஸ்பூர்த்தி தாய் தந்தையுடன் அமெரிக்காவில் வசிந்து வந்தார். பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்து சென்னையிலேயே வீடு எடுத்து தங்கினார்கள்.
!Advert!
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களின் விருப்பத்துக்குறிய சிறுமியாக இருந்த ஸ்பூர்த்தி சீசன் 3 வெற்றியாளராக தேர்வு செய்யப் பட்டார். அதன் பின் பல வருடங்களாக ஸ்பூர்த்தியை காணவில்லை. விஜய்டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்ட போதும் ஸ்பூர்த்தி வருவதில்லை.
இந்த நிலையில் திடீரென நேற்றைய தினம் சென்னை ஆர்.ஆர். சபாவில் 2.1/2 மணி நேரம் இடைவிடாமல் பாடி அசத்தியுள்ளார். இது தொடர்பாக ஸ்பூர்த்தியிடம் பேசிய போது.. நான் 5ம் ஆண்டு படிக்கும் போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன்.ஆனால் எனக்கு இசையை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.
!Advert!
அத்துடன் அம்மா அப்பா என்னை படிக்க வேண்டும் என கூறினார்கள் அதனால் படிப்பையும் இசையையும் கற்றேன். தற்போது 9ம் வகுப்பில் படிக்கிறேன். நான் தான் வகுப்பில் முதல் மாணவி. அதே போல் முறைப்படி இசையை கற்றுவருகிறேன்.
4 வருடங்கள் படித்துவிட்டேன். அதனால் அனைவர் முன்னிலையிலும் இசைக்கச்சேரி ஒன்றை அம்மா ஏற்பாடு செய்தார்கள். நேற்று தான் கச்சேரி முடிந்தது. இனி நிச்சயம் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன் என கூறியுள்ளார்..!!
!Advert!