இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்..!!!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி பாராட்டியுள்ளார்.
மொஹாலியில் நேற்று இடம்பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, 52 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 50க்கும் மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.
22 and counting.
No cricketer has passed 50 more times in T20Is than Virat Kohli. pic.twitter.com/w965wAUFdH
— ICC (@ICC) 19 September 2019
அதனை தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுவரைக்கும் கோஹ்லி 71 போட்டிகளில் 22 அரைசதங்களை பெற்றார். கோஹ்லி இந்த வருடம் டெஸ்டில் 53.14 சராசரியையும், ஒருநாள் தொடரில் 60.31 சராசரியையும், டி20யில் 50.85 சராசரியையும் பெற்றுள்ளார்.
Tests: 53.14
ODIs: 60.31
T20Is: 50.85Virat Kohli once again averages over 50 in all three international formats ? pic.twitter.com/3R8GnYwtvE
— ICC (@ICC) 18 September 2019
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி சாதனை படைத்த கோஹ்லியை பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்:
‘வாழ்த்துக்கள் விராட் கோஹ்லி. நீங்கள் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர். நீங்கள் மேலும் பல சாதனைகளை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்துடன் உங்கள் தொடரின் மூலம் உலகெங்கும் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள் என நான் நம்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) 18 September 2019