இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று..!
இன்றைய தினம் நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நடைபெறவுள்ளது. நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் (Mount Maunganui) பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி, இலங்கை நேரப்படி காலை 7.30க்கு ஆரம்பமாவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை நியூஸிலாந்து அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. முன்னதாக நடைபெற்ற 20 க்கு 20 கிரிக்கட் தொடரை 5 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இன்றைய தினம் நடைபெறவுள்ள இறுதி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிலும் வெற்றிபெற்று, தொடரை 3 க்கு 0 என முழுமையாக கைப்பற்றும் நோக்கில் நியூஸிலாந்து அணி களமிறங்கவுள்ளது. மறுபுறத்தில் தொடரை முழுமையாக இழப்பதை தவிர்ப்பதற்காக இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் நோக்கில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.