இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று..!
இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி சென்சூரியனில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளுக்கும் 1 க்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. ஆகவே இன்றைய தினம் நடைபெறவுள்ள இறுதி போட்டி இரண்டு அணிகளுக்கும் பெரும் சவாலான போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.