கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலிய வீரர்களின் திருமணங்களும் தள்ளி வைப்பு..!!
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இடை நிறுத்தப்பட்டது. ஜூலை மாதத்திற்கு பிறகு தான் மீண்டும் கிரிக்கெட் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வீரர்கள் ஊதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி அவுஸ்திரேலிய வீரர்களின் திருமண நிகழ்வுகளும் தள்ளி வைத்துள்ளன. ஆவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, பெண்கள் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜோனஸ்சன், ஜேக்சன் பேர்ட், மிட்செல் ஸ்வெப்சன், அண்ட்ரிவ் டை, டி ஆர்கி ஷார்ட், கேட்லின் ஃபிரையெட், மெக்டேர்மோட் ஆகியோருக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேக்ஸ்வெல், கேட் கம்மின்ஸ் ஆகியோரின் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண திகதிக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.