சமூக வலையத்தளங்களில் வலம் வரும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் டுவிட்!
கொடிய கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து பல பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவும் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிலையில் ஊரங்கு காலத்தில் பொழுதை கழிக்கும் விராட் கோலி, அனுஷ்கா சர்மா மற்றும் குடும்பத்தினர் அமர்ந்து மோனோபாலி என்ற விளையாட்டு விளையாடியுள்ளனர். அதை அனுஷ்கா சர்மா போட்டோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நமக்கு எப்படி நடக்க வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எப்படி அடுத்தவர்களை மதிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தவர்களுடன் இணைந்து ஆடிக் கொண்டுள்ளோம். இந்த உலகத்தை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள், அனைவரும் வீடுகளிலேயே இருங்கள். உங்களையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் போட்டி செமையாக இருந்தது. கடும் போட்டியும் கூட. யார் ஜெயிச்சான்னு உங்களால கெஸ் பண்ண முடியுதா என்றும் கேட்டுள்ளார். தற்போது இந்த டிவீட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
— Anushka Sharma (@AnushkaSharma) April 7, 2020