கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் பந்து வீச்சாளர்களுக்கு மிகக்கடினம் – கவுதம் கம்பீர்
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் பந்து வீச்சாளர்களுக்கு மிகக்கடினம் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். உயிரை காவு வாங்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளனர். அதேபோல் பொதுவெளியில் எச்சில் துப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பந்து வீச்சாளர்கள் தங்கள் வியர்வை மற்றும் எச்சிலை கொண்டு தான் பந்தை பளபளக்க செய்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ‘எச்சில்’ பயன்படுத்தினால் மற்ற வீரர்களுக்கு அதன் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பயன்படுத்த ஐசிசி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது. எச்சில்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான விஷயம் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற நிலையில் கவுதம் கம்பீர் தெரிவிக்கையில், எச்சில் பயன்படுத்த தடை விதிப்பது பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான விஷயம். ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர உள்ளது. பந்தை பளபளப்பாக்க முடியவில்லை என்றால், பந்துக்கும் பேட்டிற்கும் இடையில் சரியான போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.