டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பு..!!
எதிர்வரும் 2021 ஆண்டிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியவில்லை எனில் ரத்து செய்யப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
கொடிய கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை ஆகவே, 2021 ஆம் ஆண்டிலும் கூட போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவில் தொடர்ந்து 3,000 பேர் அல்லது 5,000 பேரை பணியில் வைத்திருக்க முடியாது என்றும், மீண்டும் மீண்டும் ஒத்திவைத்து ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடும் போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமற்றது என்றும் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார்.