அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை தொடரை ஒத்தி வைப்பு..!!
2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டி-20 உலகக் கோப்பை போட்டியை ஒத்திவைக்க முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தொடங்கி நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது
கொடிய கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கிலும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நிலையில், டி 20 உலகக் கோப்பை போட்டி தள்ளி வைப்பது தொடர்பாக ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த ஆலோசனை கூட்டத்தில் போட்டியை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்க முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போது வரை ஐசிசி தரப்பிலிருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.