குறித்த திகதியில் ஐ.பி.எல் போட்டி மட்டும் நடந்திருந்தால்? டோனியின் ஆட்டம் எப்படியிருந்திருக்கும தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் மட்டும் இப்போது நடந்திருந்தால், டோனியின் ஆட்டம் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் காலவரை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பயிற்சியின் போது தனது டோனி எவ்வாறெல்லாம் செயல்பட்டார், எவ்வளவு துடிப்பாக இருந்தார் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா தெரிவிக்கையில், நாங்கள் பயிற்சியை தொடங்கிய முதல் சில நாட்கள் டோனி ஜிம்மில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார்.
வலை பயிற்சியின் போது வித்தியாசமான பல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர் கொண்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரது உடலும் எப்போதும் போல் ஆரோக்கியமாக இருந்தது. பல மணி நேரங்கள் நாங்கள் பயிற்சி செய்தோம். ஆனால் அவரிடம் சிறிது கூட புத்துணர்ச்சி தொலைந்துவிடவில்லை. உற்சாகத்துடன் இருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் டோனி தனது பேட்டிங் முறையில் பல மாற்றங்களை செய்து இருந்தார். டோனியுடன் நான் பல வருடங்கள் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால், இந்த வருட தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது என்று நினைத்தேன். அவர் வெறித்தனமாக தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தொடர் நடைபெறவில்லை. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது நீங்கள் அவரது ருத்ர தாண்டவத்தை பார்ப்பீர்கள் என்று ரெய்னா கூறியுள்ளார்.