நான் விராட் கோலி போல தலை சிறந்த வீரராக மாற முயற்சி செய்வேன் – பாபர் அசாம்
இந்திய துடுப்பாட்டக்காரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான விராட் கோலி ஒரு தலை சிறந்த வீரராகும். விராட் கோலி போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ண டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை பாபர் அசாம் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகின்றமையால் விராட் கோலியை போன்ற சிறந்த வீரராக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக பாபர் அசாம் தெரிவிக்கையில்‘‘ நான் இன்னும் அதிகமான சாதனைகளை எட்ட வேண்டியுள்ளது. விராட் கோலி தலை சிறந்த வீரர்களில் ஒருவராவர். அவரை போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன். மேலும் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து சாதனைப் படைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.