விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ விடுத்த முக்கிய அறிவிப்பு…!!!
இலங்கை கிரிக்கெட் முன்னாள் அணித் தலைவர் திலங்க சுமதிபால என்பவர் எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்தவொரு விதமான பதவியையும் வகிக்க முடியாது என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அவர் நியமித்த மூவர் கொண்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த தடையை அமைச்சர் விதித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமைச்சர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றில் சுமதிபால நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
சுமதிபால வாக்களிப்பதையும் கடந்த கால தலைவர் என்ற விதத்தில் மேற்கொள்ளுவதையும் இலங்கை கிரிக்கெட்டை பிரதி நிதித்துவம் செய்வதையும் தடை செய்யுமாறு அமைச்சர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
அதேவேளையில் இந்த தடை குறித்து தான் இன்னமும் அறியவில்லை என கூறியுள்ள சுமதிபால தனக்கு இதை அறிவிப்பதற்கு முன்னர் அமைச்சர் ஊடகங்களிற்கு அறிவித்ததாக கூறியுள்ளார்.