4 வருடங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன்…!!!
2015 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச போட்டியில் இ்நதிய அணிக்காக களமிறங்கிய இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு 4 வருடத்திற்கு பின் எதிர்வரும் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார்.
மேலும் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் தெரிவிக்கையில், இந்திய ஜெர்சியில் விளையாட உங்களை தகுதியுடையவராக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எல்லாம் விரைவாக நடக்காது. 19 வயதில் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் விளையாடியதும், இந்திய ஏ அணியில் அவருக்கு கீழ் பயிற்சி பெற்றதும் எனது அதிர்ஷ்டம்.
அதையடுத்து, ராகனே, வாட்சன், ஸ்மித். பட்லர், ஸ்டோக்ஸ் ஆகிய சிறந்த வீரர்களை சந்தித்து அவர்களுடன் விளையாட்டு தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். வாய்ப்பு கிடைக்காத நாட்களில் நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு தற்போத கிடைத்துள்ள வாய்ப்பை தவறவிடாமல் சிறப்பாக பயன்படுத்துவேன் என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.