இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் டோனி ஓய்வு பெறப்போகிறாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தால் மகேந்திரசிங் டோனி ஓய்வு குறித்து பெரும் பரபரப்பு வதந்தி கிளம்பியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா விளையாட உள்ள நிலையில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் மகேந்திரசிங் டோனி ஓய்வு குறித்து பரவிய வதந்தி பரவியுள்ளது பற்றி பேசிய கோஹ்லி, என் மனதில் எந்தவொரு தீய எண்ணமும் இல்லை, நான் என் வீட்டில் இருந்தவாறே என் ட்விட்டர் பக்கத்தில் படத்தை பதிவேற்றினேன், அதுவே செய்தியாக மாறியுள்ளது.
அந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது, நான் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை, அதனால் தான் நான் புகைப்படத்தை பதிவிட்டேன். ஆனால் அந்த புகைப்படத்தை நான் என்ன நினைத்து பதிவிட்டேனோ, மக்கள் அதை அவ்வாறான பார்க்கவில்லை, மாறாக மக்கள் அதை தவறாக எடுத்துக்கொண்டார்கள். இதன் மூலம் சமூக வலைதள உலகில் நான் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொண்டேன்.
மேலும் அவர் கூறிய போது அனுபவம் என்பது எல்லோர் வாழ்விலும் முக்கியமானது. பல வீரர்கள் கடந்த காலங்களில் வயது என்பது ஒரு எண் என்பதை நிரூபித்துள்ளனர், டோனி கூட தனது வாழ்க்கையில் நிறைய சாதனைகளை சாதித்துள்ளார். அவரைப் பற்றி ஒரு பெரிய விஷயம் என்ன என்றால் எப்போதும் இந்திய கிரிக்கெட்டை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார். கிரிக்கெட் விளையாடுவதை எப்போது நிறுத்த வேண்டும் என்பது முற்றிலும் தனிப்பட்ட முடிவு. இந்த விவகாரம் தொடர்பாக யாரும் எந்தவொரு கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என கோஹ்லி கூறினார்.
இந்திய அணி குறித்து பேசிய கோஹ்லி, கடந்த 2 வருடங்களாக உள்நாட்டு தொடர் மற்றும் ஐபிஎல், டி-20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க நாங்கள் விரும்பினோம். இதன் மூலம் சிறந்த சமநிலையைான அணியை உருவாக்கியுள்ளோம். மற்ற அணிகள் ஒன்பதாம் விக்கெட் வரை துடுப்பாடும் போது, ஏன் நம்மால் மட்டும் முடியாது? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அவை எதிர்காலத்தை குறித்தே எடுக்க வேண்டும் என்றும் கோஹ்லி கூறினார்.