இந்தியா vs தென் ஆப்பிரிக்கா இடையில் நடைபெறவுள்ள டி-20 போட்டி மழையால் பாதிக்குமா ???
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையில் நடைபெறவுள்ள முதலாவது டி-20 போட்டி மழையால் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி தர்மசாலாவில் இன்று செப்டம்பர் 15ம் திகதி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
தர்மசாலாவில் பலத்த மழை பெய்த வருவதால் போட்டி ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. வானிலை முன்னறிவிப்பின்படி, பகலில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது . ஏனென்றால் தர்மசாலாவில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே தர்மசாலா மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இரவு 7 மணிக்கு டி-20 போட்டி தொடங்கும், ஆனால் மழை ஏற்பட்டால், தர்மசாலா மைதானத்தில் நல்ல வடிகால் அமைப்பு உள்ளது. இருப்பினும் முழு போட்டி நடக்கும் அளவிற்கு மைதானம் தயாராகும். குறைந்தபட்சம் 5 ஓவர் போட்டியாவது அதிகாரப்பூர்வமாக நடைபெறும். கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக இந்திய அணியின் வலைப்பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய அணி உள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரில் 3-0 என்ற கைப்பற்றிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராககளமிறங்கும் என்பதை எதிர்நோக்கி காத்திருக்க இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
2020 டி-20 உலக கிண்ணத்தை பெறுவதற்காக முழு வீச்சில் செயல்பட்டு வரும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு சவாலாக அமையும் என எதிர் பார்க்கப்படுகின்றது.