நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ டென்லி தவறவிட்ட பிடி – நடந்தது என்ன?
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளது. நியுசிலாந்து அணிக்கு எதிராக களமியங்கிய இங்கிலாந்து அணி வீரர் ஜோ டென்லி தவறவிட்ட பிடி கிரிக்கெட் உலகின் கவனத்தை திருப்பியுள்ளது.
ஜொவ்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கேன் வில்லியம் சன் அடித்த பந்தினை ஜோ டென்லி பிடித்து விட்டார் என நினைத்து ஆர்ச்சர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆர்ச்சரை திரும்பி பார்க்குமாறு ஜோ ரூட் சைகை காட்டினார், அதனை தொடர்ந்து ஆச்சர் திரும்பி பார்த்த போதே ஜோ டென்லி பிடியை தவறவிட்டுள்ளதை அவர் தெரிந்து கொண்டார்.
ஆர்ச்சர் அதனை சிரித்து சமாளித்த போதிலும் ஏனைய இங்கிலாந்து வீரர்கள் தலையில் கை வைத்துள்ளனர். அதன் காரணமாக போட்டியின் முடிவில் கேன் வில்லியம்சன் சதம் பெற்றுள்ளார். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்ததை தொடர்ந்து நியுசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தவறவிடப்பட்ட மோசமான பிடி இதுவென கருத்துக்கள் வெளியாகியுள்ளார். டெஸ்ட் போட்டி வர்ணணையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஸ் ஜோ டென்லி உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என குறியுள்ளனர்.
மேலும் இது மிகவும் ஆச்சரியமான விடயம்,கடந்த காலங்களில் இலகுவான பிடிகள் சில தவறவிடப்பட்டதை நாங்கள் பார்த்திருப்போம் ஆனால் இதனை எப்படி தவறவிட முடியும் என்பது எனக்கு புரியவில்லை, வாய்ப்பேயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் மிக மோசமாக தான் கிரிக்கெட் விளையாடுவேன் அதனுடன் ஒப்பிட்டால் ஜோ டென்லி தவறவிட்டது மிக மோசமான ஒரு பிடி என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த பிடியை தவறவிட்டமைக்காக ஜோ டென்லியை கைது செய்ய வேண்டும் என மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.