ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சவால் விடுத்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஆடுகளத்தில் இங்கிலாந்து அணியை நெருங்கவே முடியாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மான்செஸ்டரில் இடம்பெற்று வரும் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றது.
இதன் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து கூறியதாகவும், இங்கிலாந்து வீரர் ராய் தவறவிட்டால், பேரிஸ்டோவ் உங்களைப் பார்த்துக்கொள்வார். இவர்கள் இருவரும் தவறவிட்டால், ரூட் உங்களைப் பார்த்துக்கொள்வார். அவர்கள் அனைவரும் தவறவிட்டால் பட்லர் உங்களைப் பார்த்துப்பார்.
மற்றும், ஜோஃப்ரா எப்போதுமே உங்களைப் பார்த்துக்கொள்வார்! இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத்தை கொடுத்துவிடுங்கள் என கூறியுள்ளார்.இதற்கு பதிலடி கொடுத்த சில இந்திய ரசிகர்கள், இங்கிலாந்தின் எல்லா அணியையும் இந்தியா நல்ல படியா பார்த்துக்கொள்ளும், இந்தியாவிற்கு உலக கோப்பையை கொடுத்துவிடுங்கள் என குறிப்பிட்டனர்.
உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரைக்கும் நான்கு தொடரில் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி 3 வெற்றி, 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் நான்கவாது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.