இங்கிலாந்து அணியை தாழ்த்தி பேசிய இலங்கை அணி..!
உலகக கிண்ணப் போட்டியில் எதிர்வரும் யூன் 21ம் திகதி ஹெடிங்லி விளையாட்டுமைதானத்தில் இடம்பெறவுள்ள தொடரில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடவுள்ளனர்.இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதால் பலம் பொருந்திய இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து கொண்டுள்ளதாகவும் இலங்கை பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி மிகவும் பலம் பொருந்திய வரிசையில் கொண்டுள்ளது. அவர்கள் எப்போதுமே எதிர்த்தாடவே முனைவார்கள்.இங்கிலாந்து அணி விளையாடுவதை நாங்கள் கண்காணித்துள்ளோம். அவர்கள் பலம் மற்றும் பலவீனத்தை நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவர்களிடம் இருக்கும் பலவீனத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்துவோம்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களிடம் இருந்து இன்னும் நான் மிக அதிகமாக எதிர்பார்க்கின்றேன். இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என இங்கிலாந்து அணி தலைவர் ருமேஷ் ரத்னாயக்க தெரிவித்தார்.