விளையாட்டு மைதானத்தை அதிர வைத்த இலங்கை அணி..!!
லீட்ஸில் நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய இலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. மேலும் இத் தொடரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குறிப்பிட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களை அதிகமாக பெற்று தந்தார்.மேலும் இதனை தொடர்ந்து 233 என்ற வெற்றி படியை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், லசித் மலிங்க கூடிய விக்கட்டுக்களை பெற்றது.10 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை அவர் கைப்பற்றினார்.இத்தனை தொடர்ந்து லசித் மலிங்க, உலகக் கோப்பை கிரிக்கட் தொடரில் 50 விக்கட்டுக்களைக் பெற்று பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது வீரராக சேர்ந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் க்ளென் மெக்ராத், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் பாகிஸ்தானின் வஸிம் அக்ரம் ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் காணப்பட்ட்னர்.நேற்று இடம்பெற்ற தொடரில் வெற்றி அடைந்ததன் ஊடாக இலங்கை அணி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5 ஆம் நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி, 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.