ஒட்டுமொத்த மீடியாக்களின் முன்பும் கண்ணீர்விட்டு அழுத ஸ்ரீதேவியின் கணவர்..இது தான் காரணமா .!?
தமிழ் சினிமாவில் மகுடம் சூடா ராணியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் கடந்த வருடம் துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் குளியல் தொட்டிக்குள் மூழ்கி இறந்து கிடந்தார். இன்றளவும் இவரது இழப்பு பலருக்கு கவலை தான்.
அப்படி தினமும் கவலைப் படுபவர்களில் ஒருவர் ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர். நடிகை ஸ்ரீ தேவியை காதலித்து திருமணம் செய்த போனி கபூர் தற்போது தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றி வருகின்றார் அதாவது தல அஜித்துடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படதில் நடிக்கும் போது தனது கணவரின் இயக்கத்தில்
திரைப்படம் ஒன்றில் நடிக்குமாறு அஜித் குமாரிடம் ஸ்ரீ தேவி கேட்டிருந்தார். அப்போது பிஸியாக இருந்ததால் கண்டிப்பாக நடிக்கிறேன் என ஸ்ரீதேவிக்கு வாக்கு கொடுத்தார் அஜித். அதனால் போனி கபூரின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அஜித் “நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் நேர்கண்ட பார்வை ட்ரைலர் வெளியாகியது. இது தொடர்பாக தமிழ் மீடியாக்களை முதல் முதல் சந்தித்த போனி கபூர் திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.
ஸ்ரீ தேவி பற்றிய கேள்வி எழுந்த போது கலங்கிய கண்களை துடைக்க முயன்று முடியாமல் அத்தனை மீடியாக்கள் முன்னிலையிலும் அழுது விட்டார். இதனால் கேள்வியை மாற்றி கேட்டு அவரை ரிலாக்ஸ் செய்ய வேண்டியதாகிவிட்டது மீடியாக்களுக்கு..!