ஊரடங்கு சட்டம் தொடர்பாக வெளிவந்த முக்கிய தகவல்!
”பொசன்” பூரணை (போயா) தினத்திற்கு பின்னர் தற்போது அமுலிலுள்ள கொரோனா ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரமும் எந்தவொரு கொரோனா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைய இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமும் ஞாயிற்றுகிழமைகளில் அமுல்படுத்தப்படும் ஊரங்கு சட்டத்தையும் நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதேநேரம், எதிர்வரும் ஜுன் மாதம் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.