இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான தொடரில் வெற்றி பெறுமா இலங்கை??
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் 27 ஆவது தொடரில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.இத் தொடரில் என்று இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் தொடங்கவுள்ளது. மேலும் இலங்கை அணி இதுவரைக்கும் 05 போட்டிகளை எதிர்த்து விளையாடியது அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டு போட்டியில் தோல்வியையும் அடைந்தது.மேலும் இரு போட்டிகள் மழை காரணமாக எவ்வித முடிவும் இன்றி இடை நிறுத்தியமை.
4 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியானது மற்றய நான்கு போட்டிகளிலும் வெற்றியடைந்தால் ஒருமிக்க 12 புள்ளிகளை அடைந்து அரையிறுதிக்கு போகும் வாய்ப்பினை பெற்று கொள்ளலாம். இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கா நல்ல ஆதரவை வழங்கி வருகின்ற போதிலும் மத்தியதர வீரர்கள் அவர்களுடைய ஆதரவை உரிய முறையில் தொடரில் பயன் படுத்துவது இல்லை எனவும் கூறினார்.
குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் திஸர பெரேரா ஆகியோர் சொதப்பலான போன்ற அனுபவம் உள்ள வீரர்கள் மிக சிறப்பான முறையில் ஆட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர்.எதிர் முனையில் இங்கிலாந்து அணி மிக அபாரமாக ஆடி வருகிறது.இங்கிலாந்து விளையாடிய 5 போட்டியில் விளைாயடி நான்கில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் பெற்றது. 8 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது.
துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் இரண்டில் பலம்பொருந்திய அணியாக திகழும் இங்கிலாந்து அணியை இலங்கை அணி இன்றைய தொடரில் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை பொறுத்து இருந்து பாப்போம். சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரைக்கும் 10 போட்டிகளில் எதிர்த்துள்ளனர். அதில் இங்கிலாந்து அணி 6 போட்டிகளிலும் இலங்கை அணி 4 போட்டிகளிலும் வெற்றி அடைந்துள்ளனர்.