ஆபத்தான நிலையில் இலங்கை மக்கள்..! மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு..!!
இலங்கையில் கம்பஹாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப் பட்ட நிலையில் குறித்த பெண் பணி புரிந்த நிறுவனம் சீல் வைக்கப் பட்டதுடன் அங்கு பணி புரிந்த 400க்கு அதிகமானோர் தனிமை படுத்தப் பட்டுள்ளனர். அத்துடன் விடுமுறையில் சென்றவர்களை தனிமை படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு யுவதிகள் விடுமுறையில் சென்ற நிலையில் அங்கு தனிமை படுத்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கப் பட்டதுடன் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளைய தினத்தில் இருந்து இரண்டாம் தவனைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்துகளிலும் ஆசனத்தின் அளவு மட்டுமே பயணிகள் ஏற்ற முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளதுடன் மாஸ்க் கட்டாயமாக்கப் பட்டுள்ளது, களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அத்துடன் மினுவன்கொடயில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது.
இதனால் மீண்டும் இலங்கையில் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாகவும் நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் நடைமுறை படுத்த வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது..!!