ஆபத்தான நிலையில் இலங்கை.! உயிரை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலையில் இலங்கை மக்கள்.! என்ன தான் நடக்கிறது..!?
இந்தியாவை விட இலங்கை ஆபத்தான கட்டத்தை நோக்கி செல்வதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொரோனா வைரஸ் தற்போது உலகளாவிய ரீதியில் குறைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் இலங்கையில் அதிகரித்து வருகின்றது,
முதலாவது அலையின் போது பெரிதாக பாதிக்கப் படாத இலங்கை 2வது அலையில் சிக்கித் தவித்து வருகின்றது. சிறிய நாடான இலங்கையில் தற்போது 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிறது, இது வரை 4809 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் உலகில் உள்ள அத்தனை கொரோனா திரிபுகளும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது,
இந்த நிலையில் இன்றைய தினம் மீடியாக்களை சந்தித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் இலங்கையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 591 பேர் கொரோனா வைரஸால் உயிர் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார், அத்துடன் இலங்கையில் அனைத்து இடங்களிலும் ஆபத்தான டெல்டா அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானமாக இருக்கும் படியும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் சில களுபோவில, ராகம, இரத்தினபுரி உட்பட சில வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இட பற்றாக்குறை இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளொன்றுக்கு சுமார் 60க்கு அதிகமான மரணங்கள், நேற்றைய தினம் 82 பேர் மரணம் என இலங்கை ஆபத்தான நிலையில் உள்ளது,
மக்களின் கவயீனமே இத்தனைக்கும் காரணம் என அரசும், அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என மக்களும் கூறி வருகின்றனர். இறுதியில் என்ன நடக்கும் என்பது கொரோனாவே அறியும்! தற்போது சீனாவை விட இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகின்றது!!