வெளி நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை அரசு..! இதோ அறிக்கை.
ஈராக் அமெரிக்கா இடையே போர் மூண்டதை தொடர்ந்து பல நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்கா இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் வாழும் அமெரிக்கா பிரஜைகளை அவதானமாக இருக்கும் படியும்,
அமெரிக்கர்கள் அனைத்து நாடுகளிலும் தாக்கப் படலாம் எனவும் அவதானமாக இருக்கும் படியும் எப்போதும் இலங்கையில் உள்ள அமெரிக்கா தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இலங்கை மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.
இதில் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அனைவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ளும் படியும், எப்போதும் கடவுச் சீட்டை கையில் வைத்திருக்கும் படியும் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்கள் மற்றும் விழாக்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது..!!