அனுராபுரம் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்து…!!!
அனுராபுரம் கெக்கிராவ நீதிமன்றத்தில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினருக்கு சொந்தமாக வாகனங்கள் நீதிமன்ற கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வழக்கு விசாரணை அறிக்கைகளை வைக்கும் அறையிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள பொலிஸ் குழுக்கள் சிலவற்றை அந்த பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச பகுப்பாய்வு குழுவினரும் சம்பவ இடத்திற்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாட்சியங்களை அழிக்கும் வகையில் இவ்வாறு அறிக்கைகளை பாதுகாக்கும் அறைக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகபடுவதாக கூறியுள்ளனர்.