மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் மரணம்…!!
மாத்தறை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறை கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளர்.
மாத்தறை – நூபே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதி மன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.