இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக வெளிவந்த அறிவிப்பு..!!
அண்மையில் இலங்கை முழுவதும் நீக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளைய தினம் இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேநேரம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் கூறப்படுகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் பண்டிகை என்பதால் அன்றைய தினம் அரசாங்க, வங்கி விடுமுறையாகவும் இருக்கின்றது. அதனால், குறிப்பிட்ட 2 நாட்களுக்கும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.