மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் – உறுதியளித்த மஹிந்த
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள அதிகரிப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளார்.
காலம் சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறிய அனைத்து கோரிக்கைகளும் கோத்தபாய அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும் அதில் எந்தவொரு சந்தேகமுமில்லை என ஆறுமுகன் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே பிரதமர் மகிந்த ராஜபட்ச வாக்கு உறுதியளித்துள்ளார்.
இன்றைய தினம் நோர்வூட் மைதானத்தில் காலம் சென்ற ஆறுமுகன் தொண்டமானின் உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதுடன் இங்கும் பிரதமர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.