வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு முக்கிய அறிவித்தல்…!!!
வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (16) திங்கட்கிழமை வழமை போல் நடைபெறும் என வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை இயங்காது என தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அது தவறான தகவல், அதை நம்பவேண்டாம். நாங்கள் அவ்வாறான அறிவிப்புக்கள் எதையும் வெளியிடவில்லை. எனவே பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
பாடசாலைகள் அரச திணைக்களங்கள் வழமை போலவே இயங்கும். குறிப்பாக பாடசாலைகள் அனைத்தும் இயங்கும். வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கல்வி அமைச்சு தற்போது எனது ஆளுகையின் கீழ் உள்ளது. நானோ அல்லது கல்வி அமைச்சின் செயலரோ அவ்வாறான அறிவித்தல்கள் எதனையும் வெளியிடவில்லை என்று கூறியுள்ளனர்.
அதையடுத்து வட மாகாணத்தில் உள்ள மாணவர்கள் எவ்வித குழப்பமும் அடைய வேண்டாம். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகளை வழமையாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பது போல் அனுப்பி வையுங்கள் என்று கூறினார்.