இலங்கை அதிபரின் எச்சரிக்கை..!!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவமதிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக, கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில், சகலரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்களை மேற்கொள்ள தயார் என்றும் அதிபர் கூறினார் .
இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.