இலங்கையின் பல பகுதிகளில் ஆபத்தான காலநிலை…!!! மக்களே அவதானம்..!
ஸ்ரீலங்காவில் பல இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஆபத்தான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த மழை மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடுத்தவரும் 24 மணி நேரத்தில் சுமார் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இதன் போது பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதையடுத்து மண் சரிவு தொடர்பாக மிக கவனமாக இருக்குமாறு இடர்காப்பு மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல் நுவரெலியா, இரத்தினபுரி , களுத்துறை , கேகாலை மாவட்டங்களிலும் அம்பகமுவ, புலத்சிங்கள, கிரியெல்ல, கடலவன, வரக்காபொல, மத்துகம போன்ற இடங்களிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.