யாழ் இந்து கல்லுாரி அதிபர் கைது..!!! காரணம் என்ன தெரியுமா??
யாழ்ப்பாணம் இந்து கல்லுாரி அதிபர் மாணவரை அனுமதிக்க இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப் பு ஆணைக்குழுவினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின் விசேட அதிகாரிகள் குழு கல்லூரி அதிபரை கைது செய்துள்ளது. பாடசாலையில் மாணவரை அனுமதிக்க இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிலேயே அதிபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகளை முன்னெடுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றசாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, பாடசாலையின் அதிபரை இன்று கைது செய்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண இந்து கல்லுாரி அதிபருடன், மேலும் சில பாடசாலை அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.