பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு பரிசு கொடுத்த ஜனாதிபதி…!!!
இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு கொடுத்துள்ளார்.
ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் கண்டுபிடித்த நிலையில் அதற்கு “Walking charger” என பெயரிட்டுள்ளார். திருகோணமலை, தன்தலாவ மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வரும் சத்துர மதுமால் என்ற மாணவனே இதனை கண்டுபிடித்துள்ளார்.
மாணவனின் இந்த அறிய கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி ஐந்து இலட்சம் ரூபா பரிசு வழங்கியுள்ளார். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை சத்துர மதுமால் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.